தமிழகத்தில் ஆகஸ்ட்12ம் தேதி மாலை நேர உழவர் சந்தை-முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

by Editor / 07-08-2022 06:44:22pm
தமிழகத்தில் ஆகஸ்ட்12ம் தேதி மாலை நேர உழவர் சந்தை-முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி வரும் 12ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இங்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஆகஸ்ட்12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இவற்றை திறந்து வைக்கிறார்.

 

 

Tags :

Share via