சாலை விபத்து.. இரட்டை குழந்தைகள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில். சாலை விபத்தில் இரட்டை குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்வாடி சவுக்கில் பெட்ரோல் டேங்கர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று வயதுடைய இரட்டை சகோதரிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தந்தை சதீஷ்குமார் ஷா மற்றும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tags :