மூன்று நாட்களாக மகள் பிணத்துடன் வாழ்ந்த தாய்
சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். மனநிலை சரியில்லாத இவரை மகள் ஷீலா கவனித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக இவர்கள் வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் இன்று காலை ஷீலாவின் வீட்டில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து அங்கு வந்த மணலி புதுநகர் போலீசார் சென்று பார்த்தபோது ஷீலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தாயார் ஜாஸ்மின் தன் மகள் இறந்தது கூட தெரியாமல் 3 நாட்கள் அவருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :