மதுபான கொள்ளை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் -டாக்டர் கிருஷ்ணசாமி
மதுபான கொள்ளை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக அரசு தமிழக முதலமைச்சர் வரை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
தென்காசி தனியார் விடுதி ஒன்றில் வாக்குச்சாவடி முகவர் பயிற்சி கூட்டம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுபான கொள்ளை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக அரசு தமிழக முதலமைச்சர் உட்பட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் இதனை சாதாரணமான விவகாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் யாருடன் கூட்டணி என இன்னும் முடிவு செய்வதற்கு காலம் இருப்பதாகவும் நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருவதாகவும் திமுக அரசின் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கான திட்டம் இல்லை எனவும் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்து விட்டதாக அவர் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags : மதுபான கொள்ளை விவகாரத்தில்