தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் 

by Editor / 28-07-2021 04:15:02pm
தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் 



தமிழ்நாடு முழுவதும், தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


பல இடங்களில் அதிமுகவினர் தங்களுடைய வீடுகளின் முன்பாக கட்சிக் கொடி ஏந்தியவாறும் சிலர் பொது இடங்களில் கூடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் நேரத்தில் தற்போது மாநிலத்தில் ஆளும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை அந்த கட்சி நிறைவேற்ற வேண்டும் என அதன் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்துகிறது," என்றார்.


நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், எதையும் அந்த கட்சி நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.


இதேபோல, தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரும் அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம், "திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 55 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சராக நான் இருந்தபோது பதவியில் இருந்த அதே நிதித்துறை செயலாளர் தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார். நான் எவ்வாறு செயலாற்றினேன் என அவருக்கு தெரியும். அது பற்றி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்கத் தயார்," என்று கூறினார்.

 

Tags :

Share via