75வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு தபால் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தேசிய கொடி விற்பனை

by Editor / 02-08-2022 05:27:23pm
75வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு தபால் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தேசிய கொடி விற்பனை

நாட்டின் 75வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ள வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுவோம் என்று இயக்கத்தின் அடிப்படையில் தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடியை விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால் துறையின் இ போஸ்ட் ஆபீஸ்( E post office )என்ற இணையதளத்தின் மூலம் மக்கள் தேசியக் கொடியை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கலாம் ஒரு தேசியக் கொடியின் விலை 25 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஜிஎஸ்டி வரி கிடையாது நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via