குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் நகை திருடிய பெண் கள்ளக் காதலனுடன் கைது,

by Editor / 28-10-2023 09:55:16am
குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் நகை திருடிய பெண் கள்ளக் காதலனுடன் கைது,

குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் நகை திருடிய பெண் கள்ளக் காதலனுடன் கைது, 


தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரியை சேர்ந்தவர்  குருவம்மாள் (60) விவசாயம் செய்து வருகிறார். இவர் விநாயகர் கோவில் தெருவில் குடியிருந்து வருகிறார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும் 1 பெண் பிள்ளையும் உள்ளனர்.  சென்னையில் வசிக்கும் தனது மகள் பூங்கொடியை பார்க்க கடந்த 21-தேதி மதியம் 2மணிக்கு சென்னைக்கு சென்று விட்டு 27-ம் தேதி காலை 9 மணிக்கு சொந்த ஊரான ராயகிரி வீட்டிற்க்கு வந்துள்ளார். அதன் பின்பு கடந்த 6-ம் தேதி தனது இரண்டாவது மகன் கணேசனுக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு செல்வதற்க்காக வீட்டில் இருந்த நகையை அணிவதற்க்காக  இந்நிலையில், நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து குருவம்மாள் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  இந்த சம்பவம் குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்  அதே பகுதியில் வீட்டுவேலை பார்த்து வந்த  பார்வதி (33) வெகுநாட்களாக குருவம்மாளின் வீட்டில் வாடகைக்கு குடி இருந்து வந்துள்ளார்.

 மாத வாடகை பணம் கொடுக்கும் போது நோட்டம்மிட்டு குருவம்மாள் எங்கே பீரோ சாவி வைப்பார் என்பதை தெரிந்துகொண்டு தனது சாமர்த்தியால் 15 பவுண் நகையை திருடிக் கொண்டு அதே பகுதியில் பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கும் செல்வராஜ் (37) என்பவருக்கு திருடிய நகையில் முப்பதாயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். காவல் துறையினர் விசாரனை நடத்திய போது இருவருக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்துள்ளது.

விசாரனையில் நகைகள் , திருடி இவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தியது தெரிய வந்தது.அடமானம் வைக்கப்பட்ட அனைத்து நகைகளை மீட்க்கப்பட்டன. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
15 பவுண் நகைகளை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தார்.

 

Tags : குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் நகை திருடிய பெண் கள்ளக் காதலனுடன் கைது,

Share via