மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பலி

by Staff / 02-11-2023 04:22:48pm
மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பலி

சாத்தான்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் சுடலைகண்ணன் (50. தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். மகன் சண்முகசுந்தரம் சென்னையில் ஐ. டி. நிறுவனத்தில் வேலை பாா்ப்பதால் இவா்கள் குடும்பத்துடன் சென்னையில் இருந்துவந்தனா். சுடலைகண்ணனுக்கு வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில், தசரா விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த சுடலைகண்ணன், வயிற்று வலியால் கடந்த 26ஆம்தேதி சாத்தான்குளம் கரையடி சுடலைமாட சுவாமி கோயில் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமணையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா். புகாரின்பேரில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளா் மெட்டில்டா ஜெயந்தி வழக்குப் பதிந்தாா்; உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் விசாரித்து வருகிறாா்.

 

Tags :

Share via