சாராய ஆறு ஓடுவதாக குற்றம்சாட்டினார். நாராயணசாமி

by Staff / 29-11-2022 04:15:17pm
 சாராய ஆறு ஓடுவதாக குற்றம்சாட்டினார்.  நாராயணசாமி

புதுச்சேரியில் சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் புதிய மதுபான கடை அமைக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயாண சாமி தலைமையில் காங்கிரஸாரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுபேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியில் புதிதாக 350 மதுபான கடைகள் திறக்கப்பட்டுளதாகவும், 6 மாதுபான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுவதாகவும், பள்ளி, கோயில்கள், குடியிருப்பு பகுதிகளிலும் மதுபான விடுதிகள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
 

 

Tags :

Share via