புதுமணத் தம்பதி கொலை  - பெண்ணின் தந்தை கைது

by Editor / 03-11-2023 09:14:20am
புதுமணத் தம்பதி கொலை  - பெண்ணின் தந்தை கைது

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சார்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம்(23)இவர் சிப்பிங் கம்பெணி ஒன்றில் பணியாற்றி வருகின்றார் இவர் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா(23) என்ற பெண்னை காதலித்து வந்துள்ளார் காதலுக்கு கார்த்திகாவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்  தேவர்ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடி வந்து மாரிசெல்வத்தை திருமணம் செய்துள்ளனர் இதைத் தொடர்ந்து இந்நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் 3 இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்த சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
காதல் திருமணம் செய்த புது மணத்தம்பதி கார்த்திகா- மாரி செல்வம்  கொலையில் கார்த்திகா தந்தை முத்துராமலிங்கம் மற்றும் உறவினர்கள் கருப்பசாமி, பரத் ஆகிய  மூன்று பேர்கள் உள்ளிட்ட சிலர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தநிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படையினர் கைது செய்தனர்.தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

 

Tags : புதுமணத் தம்பதி கொலை  - பெண்ணின் தந்தை கைது

Share via