பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

by Admin / 29-07-2021 02:22:11pm
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது


   
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 59). இவர், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அதை தனக்கு அறிமுகமான 17 வயதான பிளஸ்-2 மாணவியிடம் அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
 
இதுகுறித்து மாணவி தரப்பில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேந்திரன் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via