அதிமுக கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை

by Staff / 07-11-2023 02:47:15pm
அதிமுக கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை

அதிமுக கொடியை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை சுட்டிக்காட்டி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via