இலங்கை சிறையில் இருந்த 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

by Editor / 09-11-2023 11:47:51pm
இலங்கை சிறையில் இருந்த  38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

இலங்கை சிறையில் மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைது செய்யபட்டு அடைக்கப்பட்டுள்ள நிலையில் 
நேற்று 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து.இதன் தொடர்ச்சியாக 38 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம்  42  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட38 தமிழக மீனவர்கள்.

Share via