ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில்குற்றவாளிக்கு மரண தண்டனை
கேரளா மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கியது.. கேரள மாநிலம் எர்ணாகுளம் கைக்காட்டுக்காரர் என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களது ஐந்து வயது பெண் குழந்தை ஜூலை மாதம் 27ஆம் தேதி காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடி குழந்தை காணாது போனது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து காவல் நிலையத்தினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், பெண் குழந்தையின் பெற்றோர்கள் வசித்த வீட்டில் மேல் தளத்தில் வசித்த அசாபக்ஆலம் என்ற இளைஞர் சிறுமியை அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து குழந்தையை கொன்று சாக்கு பையில் கட்டி சடலத்தை ஒழித்து வைத்திருந்ததை சிசிடி கேமரா வழியாக கண்டறிந்த காவல்துறையினர் ,ஆலமை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
. அவ் விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தாம் தான் என்றுஆலம் குற்றத்தை ஒப்புக்கொள்ள, அவனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்து வழக்கு தொடர்ந்தனார்.
. வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் போக்சோ குற்ற பிரிவில் நடந்து வந்தது.. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் கடந்த நான்காம் தேதி அசாபக்ஆலத்தை குற்றவாளி என அறிவித்து வரும் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.. இந்த நிலையில் ,இன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக அசாக் பக் ஆலத்திற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது..
Tags :