சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் : மீட்பு பணியில் தொய்வு

by Staff / 18-11-2023 01:16:22pm
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் : மீட்பு பணியில் தொய்வு

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கினர்.

இவர்களை மீட்கும் பணி 6 நாட்களாக சுமார் 150 மணி நேரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு மீட்பு பணியின் போது சுரங்கத்தில் சத்தம் கேட்டுள்ளது. அதில் மீண்டும் சுரங்கம் இடிவதை அறிந்து, மீட்பு பணி நிறுத்தப்பட்டது. மேலும் மீட்பு படையினர் வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via