அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. 

by Editor / 22-11-2023 09:32:50am
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 7 தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிகிறது. எனவே இன்று அவர் காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. 

Share via