மோடிக்கு எப்போதும் என் நினைவு தான் : உதயநிதி
பிரதமர் மோடி எப்போதும் தன்னையே நினைத்து கொண்டு இருப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்; பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்துக்கு போன போதும் என்னை பற்றி பேசுகிறார். அவரால் என்னை பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. எப்போதும் என் ஞாபகத்திலேயே இருக்கிறார். எங்கு சென்றாலும் என்னை பற்றியே பேசி வருகிறார். மோடி அரசு விடும் ரெய்டு பூச்சாண்டிகளுக்கு திமுக கிளை செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
Tags :