சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு

by Staff / 24-11-2023 02:43:32pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு

திருவையாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
பூதலூர் தாலுக்காவில் ஒரு கிராமத்தில் வசித்துவரும் ஒரு பெற்றோரின் 14 வயது மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவத்தன்று பெற்றோர்கள் 100 நாள் வேலைக்கு சென்றுள்ளனர் அப்போது அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை பயன்படுத்தி பூதலூர் தாலுக்கா அகரப்பேட்டை மேல அம்பலகாரத்தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் விமல்ராஜ்(34) என்பவர் வீட்டுக்குள் புகுந்து அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன் விமல்ராஜ் வீட்டின் பின்புறம் சுவர் ஏறி குதித்து ஓடிவிட்டார்.இது குறித்து 14 வயது மகள் கை செய்கை மூலம் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாணவியை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது சம்மந்தமாக அந்த பெண்ணின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, சப்இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆகியோர் விமல்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via