செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை : உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

by Staff / 24-11-2023 05:21:53pm
செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை : உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.அதன்படி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ரத்த பரிசோதனை, எக்கோ, எம்.ஆர்.ஐ. பரிசோதனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில். இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும், மூளை தொடர்பான பாதிப்பு இருப்பதும், முதுகு எலும்பில் வீக்கம் உள்ளதும் கண்டறியப்பட்டதான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via