ராஜினாமா செய்யவில்லை - நெல்லை மேயர் விள்ளக்கம்

by Staff / 31-08-2023 05:32:35pm
ராஜினாமா செய்யவில்லை - நெல்லை மேயர் விள்ளக்கம்

நெல்லை மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்வதாகவும், தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. சில நாட்களாகவே கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் இந்த செய்தி வெளியானது. இந்நிலையில், நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, நெல்லை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via