பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த போலி போலீசார்

by Staff / 26-11-2023 01:22:29pm
பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த போலி போலீசார்

பெண் ஒருவர் இரண்டு போலி போலீசாரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் முங்காவோலி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் செல்லும் ரயிலுக்காக கணவன் மற்றும் மனைவி ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அமர்ந்துள்ளனர். போலீஸ் சீருடையில் வந்த இருவர் அவர்களை மிரட்டி தாக்கினர். கணவனை அடித்து விரட்டிவிட்டு, மனைவியை புதருக்குள் இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via