இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

by Staff / 27-11-2023 01:34:35pm
இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், பிற்படுத்தவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு, ஆர்டிஐ சட்டத்திற்கு அடித்தளம் போட்டவர் வி.பி.சிங்; தமிழ்நாட்டு மக்களின் உயிர் பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்து தந்தவர். சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல, அனைத்து மாநிலங்களின் பிரச்சனையாகும்; உரிமைக்காக போராடும் நிலை தற்போதும் உள்ளது. எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி என கூறினார்.

 

Tags :

Share via