எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

by Staff / 29-11-2023 12:23:02pm
எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்ற நீதிபதி பீலா திரிவேதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தலைமை நீதிபதி முன் வைக்குமாறு நீதிபதி பீலா எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். ரூ.4,800 கோடி முறைகேடு நடந்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2016-2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது, ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

Tags :

Share via