சட்டத்தை செயலிழக்கவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம்

by Staff / 01-12-2023 02:10:00pm
சட்டத்தை செயலிழக்கவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம்

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினார், அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.அதனை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இந்தநிலையில் இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, 2வது முறை நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்? என ஆளுநருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; இந்த விவகாரத்தில் ஆளுநரே தீர்வு காண வேண்டும்; இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via