எல்லையில் பலத்த பாதுகாப்பு: அமித் ஷா

by Staff / 02-12-2023 11:45:59am
எல்லையில் பலத்த பாதுகாப்பு: அமித் ஷா

இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - வங்கதேச எல்லைகளில் மிக வலுவான பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் நேற்று நடைபெற்ற பிஎஸ்எப்-ன் 59வது நிறுவன தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்கதேச எல்லைகளில் 560 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 60 கிலோ மீட்டர் முழுமையடையாத எல்லை வேலி அமைக்கும் பணி நிறைவடையும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via