பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்

by Staff / 29-04-2023 12:32:32pm
பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது. இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்கும் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via