கணவன் சந்தேகத்ததால் மனைவி தற்கொலை

நீலகிரி மாவட்டம் தும்மனட்டி பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதான ரங்கம்மாள், இவரது மகள் 27 வயதான ஷர்மிளா, இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை செங்காலிபாளையத்தை சேர்ந்த, ராஜேந்திரன் என்பவருடன், திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர் , மேலும் ஷர்மிளா அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் ராஜேந்தர் தனது மனைவி ஷர்மிளாவின் நடத்தையில், சந்தேகம் அடைந்துள்ளார், இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று வாழ்க்கையில் விரத்திய இடத்தை சர்மிளா, சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்துள்ளார், உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி சர்மிளா உயிர் இழந்தார், இது குறித்து ரங்கமாள் நேற்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :