டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர் உயிரிழப்பு

by Staff / 04-03-2023 03:58:45pm
டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் 40 வயதான கண்ணன், இவர் கோவில் மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார், இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவரது கடைக்கு, வந்து மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கி உள்ளார், ஆனால் அவர் இரவு வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகின்றது, இதனைத் தொடர்ந்து கண்ணன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, தகவல் தெரிவித்தார், அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து கண்ணன் இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்து, இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via