35,000 மாணவர்கள் தற்கொலை
2019-21ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 35,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் அப்பாய்யா நாராயணசுவாமி மக்களவையில் தெரிவித்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் அப்பாய்யா நாராயணசுவாமி, சமூக காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட பட்டியல் சாதி (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) மாணவர்களின் எண்ணிக்கை குறித்த எழுத்துப்பூர்வ பதிலில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவைப் பகிர்ந்துள்ளார். "நாட்டில் உள்ள சமூக பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை" என்று நாராயணசாமி கூறினார்.
Tags :