சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

by Staff / 06-12-2023 01:41:25pm
சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் காளீஸ்வரி வயது (15) , காளீஸ்வரி அதிக நேரம் செல்போனில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் காளீஸ்வரியின் தந்தை கண்ணன் காளீஸ்வரியை திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனம் உடைந்து  இருந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், காளீஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via