வெடி பொருட்கள் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

by Staff / 06-12-2023 04:02:39pm
வெடி பொருட்கள் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

தர்மபுரி மாவட்டம்பென்னாகரத்தில் இருந்துஜெலட்டின் குச்சி மற்றும்வடிபொருட்கள் ஏற்றி வந்த லாரியை கருப்பூர் சோதனைச்சாவடி அருகேகடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் வைக்கோலுக்கு கீழ் பகுதியில் 2. 1/2 டன் வெடி பொருட்கள் அனுமதியின்றி கடத்தி கொண்டு வரப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது
தொடர்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி டிரைவர் இளையராஜாவை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் வெடி பொருட்களை கோவைக்கு
கொண்டு சென்று கொடுக்கும் படி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரி சென்று கார்த்திக், தினேஷ் ஆகியோரை தேடினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. தொடர்ந்துதீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்திக், அவருடைய நண்பர் தினேஷ் ஆகியோர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் வெடி பொருட்கள் கேரளாவிற்கு எதற்காக கடத்தப்பட்டது? என்பது குறித்து கியூ பிராஞச் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள கேரளாவை சேர்ந்த முருகேசன், இப்ராகீம், ஜோசப் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via