வெள்ளத்தில் மாயமானவர் சடலமாக மீட்பு

by Staff / 07-12-2023 12:10:06pm
வெள்ளத்தில் மாயமானவர் சடலமாக மீட்பு

சென்னை தாம்பரம் அடுத்த குன்றத்தூர் மனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (25). இவரது நண்பர் குரோம்பேட்டையைச் சேர்ந்த அஜ்மல் (27), இருவரும் டூவீலரில் இரண்டாம் கட்டளை வழியாக சதனந்தபுரம் தரைப்பாலத்தை கடந்து வெள்ள நீரில் சென்றனர்.அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர், இதில் அஜ்மல் மரக்கிளையை பிடித்து உயிர் தப்பி கரை சேர்ந்தார். பிரசாந்த் நிலை என்ன ஆனது என்பது தெரியாத நிலையில், நேற்று புதரில் சிக்கி இறந்து கிடந்த பிரசாந்தின் உடலை, பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் படகில் சென்று மீட்டனர்.

 

Tags :

Share via