குறி சொல்லும் பெண்பரிகாரம் செய்வதாக கூறி தாலியை திருடி கொண்டு தப்பியபோது கைது.

by Editor / 30-08-2024 11:55:16pm
குறி சொல்லும் பெண்பரிகாரம் செய்வதாக கூறி தாலியை திருடி கொண்டு தப்பியபோது கைது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரில் நோய் வாய்ப்பட்டிருந்த ஜேசு பிரபா என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற குறி சொல்லும் பெண் ஒருவர், உடல் நலக் குறைவுக்கு பில்லி சூனியம் காரணம் என்று கூறி பரிகாரம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. இதனையடுத்து பூஜை செய்யும்போது தாலி அணியக்கூடாது என சொல்லி, ஜேசு பிரபா அசந்த நேரம் பார்த்து தாலியை களவாடிக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், தேவி லட்சுமி என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

Tags : குறி சொல்லும் பெண்பரிகாரம் செய்வதாக கூறி தாலியை திருடி கொண்டு தப்பியபோது கைது.

Share via