மத்திய அரசு கொடுத்த ரூ. 4000 கோடி என்ன ஆச்சு அண்ணாமலை கேள்வி

by Staff / 09-12-2023 03:46:50pm
மத்திய அரசு கொடுத்த ரூ. 4000 கோடி என்ன ஆச்சு   அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு கொடுத்த ரூ.4,000 கோடி என்ன ஆனது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பேசிய அண்ணாமலை, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் திமுக அரசின் மீது கோபத்தில் உள்ளனர். மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சேமித்து வைத்த மொத்த சொத்தையும் வெள்ளத்தில் இழந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via