தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

by Admin / 14-12-2023 10:55:10pm
 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பிரதான சாலையான புது ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று மாலை ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக மின் பகிர்மான பெட்டியில்  ஏற்பட்ட தீயினால் உருவான புகை மற்றும் கருகிய நெடியினால் மூச்சு திணறல் ஏற்பட்டு வங்கி ஊழியர்கள் பதட்டமாக வெளியில் ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மின்வாரியத் துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து வந்த தீயணைப்புத் துறையினர் புகையினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் கோவில்பட்டி முக்கிய சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 

Tags :

Share via