மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  எதிர்க்கட்சித் தலைவர்நாளை நேரில் பார்வையிட உள்ளார்.

by Editor / 18-12-2023 10:55:55pm
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  எதிர்க்கட்சித் தலைவர்நாளை நேரில் பார்வையிட உள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில் தென்காசி,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்  அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் பார்வையிட உள்ளார்.  நாளை (டிச.19) காலை சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரை வரும் எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்க்கமாக தென்காசி,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதோடு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது

 

Tags :  எதிர்க்கட்சித் தலைவர்++

Share via