திமுக தலைவர் நல்லாட்சி நடத்திவருகிறார்-துரைவைகோ

by Editor / 12-04-2022 10:24:11pm
 திமுக தலைவர் நல்லாட்சி நடத்திவருகிறார்-துரைவைகோ

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  7.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்ற வழக்கை தொடர்ந்ததே மத்திய அரசு தான்.கர்நாடக பாஜக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி எடுப்பதற்கு பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை.10 மாதங்களில் திமுக தலைவர் நல்லாட்சி நடத்திவருகிறார் முதல்வர் ஸ்டாலின்.132 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர்.வெற்றிடம் என குறிப்பிட்டது பொறுப்பான எதிர்கட்சி இல்லை என்பதை குறிப்பிட்டு தான்.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தவறு நடக்கக்கூடாது என அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
ஊழல் குற்றச்சாட்டு இருந்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதிமுக தனது கருத்தை கண்டிப்பாக முதலமைச்சரிடம் தெரிவிக்கும்.மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து மக்கள் மனதில் இடம் பெரும் நடவடிக்கையை வருங்காலத்தில் மேற்கொள்வோம்.என ம.தி.மு.க-வின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நெல்லையில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்,
 

 

Tags :

Share via