மது குடிக்க பணம் இல்லாததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை

by Staff / 23-12-2023 05:07:37pm
மது குடிக்க பணம் இல்லாததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை

மணம்பூண்டியைச் சேர்ந்தவர் சீதாராமன், 51; அரசு பஸ் டிரைவர். திருக்கோவிலுார் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக குடிக்கு அடிமையான நிலையில், கடந்த 20ம் தேதி மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், மனமுடைந்து வெளியே சென்றவர், விஷம் குடித்து மணம்பூண்டி, புலவர் வீதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சீதாராமன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து அவரது மனைவி ராஜகுமாரி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via