மணல்களை அப்புறப்படுத்தி விவசாய நிலத்தை மீட்டு தர வேண்டும் -அமைச்சர் உதயநிதியிடம் விவசாயிகள் கோரிக்கை.

by Admin / 25-12-2023 12:34:00pm
 மணல்களை அப்புறப்படுத்தி  விவசாய நிலத்தை மீட்டு தர வேண்டும் -அமைச்சர் உதயநிதியிடம் விவசாயிகள் கோரிக்கை.

 தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி -திருநெல்வேலி மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று விளையாட்டு- இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடார முறப்பநாடு கிராமத்தில் வயல்வெளிகளில் ஆற்றில் இருந்து வெள்ளத்தின் காரணமாக அடித்து வரப்பட்ட மணல்கள்  குவிந்து பயிர்களை எல்லாம் மூடி அழித்துவிட்டன.  இந்த மணல்களை எல்லாம் அப்புறப்படுத்தி தங்களுடைய விவசாய நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை r: அடுத்து அவர் நேரில் பார்வையிட்டார். .உடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

 

 

Tags :

Share via