3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

by Staff / 24-06-2024 02:59:10pm
3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

செங்கம் தொகுதியில் உள்ள கலஸ்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் சக்திவேல் (23). இவரது மனைவி ராஜேஸ்வரி (22)3அடி உயரமே உள்ளவர்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரியை பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் கடின முயற்சியால் அறுவை சிகிச்சை மூலம் ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சவாலான இந்த அறுவை சிகிச்சைக்கு பின் தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via