ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக பொதுமக்கள் வர வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

by Staff / 31-12-2023 12:59:49pm
 ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக பொதுமக்கள் வர வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

வருகிற 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக நேரில் வரவேண்டாம். வீடுகளில் தீபம் ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தீபாவளியாக கொண்டாடுவதற்காக பொதுமக்கள் அனைவரும் 22ம் தேதி தங்களது வீடுகளில் ராம் ஜோதி ஏற்றுங்கள். அப்போது தான் நாடு முழுவதும் மகிமை நிரம்பி வழியும் என்றார்.

 

Tags :

Share via