விசாரணைக்கு ஆஜராகாத திமுக எம்.பி., கவுதம சிகாமணி

by Staff / 04-01-2024 01:56:20pm
விசாரணைக்கு ஆஜராகாத திமுக எம்.பி., கவுதம சிகாமணி

அமலாக்கத்துறை வழக்கில் இன்றும் திமுக எம்.பி.,யும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமாக கவுதம சிகாமணி ஆஜராகவில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நடைமுறை தொடங்க இருந்த நிலையில், அவர் இன்றும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை சிறப்பு அமர்வு நீதிமன்றம் விசாரிக்கிறது.

 

Tags :

Share via