3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய பாஜக சம்மதம் - பாரிவேந்தர் எம்.பி.

by Staff / 06-01-2024 11:38:22am
3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய பாஜக சம்மதம் - பாரிவேந்தர் எம்.பி.

உலகம் முழுவதும் தற்போது பேசப்படும் பிரதமர் மோடியை, தமிழகம் அழைத்து வந்து பல்வேறு இடங்களில் பெரிய அளவில் கூட்டம் நடத்தி பேச வைத்துள்ளேன் என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில்  செய்தியாளா்களை சந்தித்த அவர், 'பாஜகவுடன் இணைந்து நல்ல தோழமைக் கட்சியாக இந்திய ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வருகிறது. பெரம்பலூா் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இரண்டு, மூன்று தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதாக, பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதில் எந்த தொகுதி பிடித்தமாக இருக்கிறதோ, வெற்றி வாய்ப்பு உள்ளதோ அங்கு போட்டியிடுவேன்' என்றார்.

 

Tags :

Share via