மனைவியை கொலை செய்தவர் கைது

by Staff / 17-01-2024 02:01:48pm
மனைவியை கொலை செய்தவர் கைது

திருவள்ளூர் மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (51). இவர் தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது அங்கு சமையல் பணி செய்து வந்த சிவப்பிரியா(35) அறிமுகமானார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று மாங்காடு காவல் நிலையத்துக்கு வந்த ஸ்ரீதர், தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். ஸ்ரீதர் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு கழுத்தில் டவலால் இறுக்கப்பட்டு கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். ஸ்ரீதர் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு கழுத்தில் டவலால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சிவப்பிரியாவின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via