2 மாதத்திற்கு பின்பு சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி

by Staff / 19-01-2024 01:08:15pm
2 மாதத்திற்கு பின்பு சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொடர் மழையின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.தற்போது சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மீண்டும் மழை பெய்தால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via