போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

by Staff / 19-01-2024 03:33:07pm
போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்த நிலையில், இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 6 கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதல் படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via