தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

by Staff / 24-01-2024 05:48:26pm
தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

எட்டயபுரம் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் மணிகண்டன் (21). இவர் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து, வீட்டிலேயே இருக்காமல், வேலைக்கு சென்று வருமாறு தாய் மஞ்சுளா அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன், வீட்டில் உள்ள பனைமர சட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via