விழுப்புரம் மாவட்டத்தில் 33 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 33 சப் இன்ஸ்பெக்டர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வானூர் சப் இன்ஸ்பெக்டர் பாபு திண்டிவனத்திற்கும், பெரியதச்சூர் அரிதாஸ் மயிலத்துக்கும், பெரியதச்சூர் மருதப்பன் ஒலக்கூருக்கும், கண்டாச்சிபுரம் குருபரன் ரோஷனைக்கும், விழுப்புரம் மகளிர் பொற்கொடி கோட்டக்குப்பம் மகளிருக்கும், தி. வி. நல்லூர் மணி திண்டிவனத்துக்கும், விழுப்புரம் தாலுகா ரவிச்சந்திரன் கெங்கராம்பாளையத்துக்கும், வளத்தி செந்தாமரைசெல்வன் ஒலக்கூருக்கும், அரகண்டநல்லூர் பார்த்தசாரதி கெடாருக்கும், கிளியனூர் விஜயராகவன் ரோஷனைக்கும், கஞ்சனூர் ரவி அரகண்டநல்லூருக்கும் என 33 சப் இன்ஸ்பெக்டர்களை, இடம் மாற்றம் செய்து, எஸ். பி. , தீபக்சிவாச் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Tags :