அமெரிக்க முன்னாள் அதிபருக்கு ரூ. 692 கோடி அபராதம்
அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக உள்ளார். நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோ பைடன், ட்ரம்பை எதிர்த்து மீண்டும் நிற்கிறார். இந்நிலையில் அமெரிக்க பத்திரிகையாளரான ஜீன் கரோல் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், 83.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 692 கோடி ரூபாய்) வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து ட்ரம்ப் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :