ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி - தஞ்சையில் சோகம்

by Staff / 29-01-2024 01:06:58pm
ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி - தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் காளையை விடுபவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டதை வி.பவுன்ராஜ் (49) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, அருகே வந்த மற்றொரு காளை மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via